search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கடை திறக்க எதிர்ப்பு"

    • கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
    • 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அரசு மதுபான கடை கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து கருமத்தம்பட்டி புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வந்தது.

    அப்பகுதியில் குழந்தைகள் நல மருத்துவ மனை உள்ளது. மற்றும் தேவாலயம் செல்லும் சாலையாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கருமத்தம்பட்டி பஸ் நிலையத்திற்கு வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் இருந்த மதுபானக்கடை அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே இடத்தில் அரசு மதுபான கடை திறப்பதாக தகவல் பரவி உள்ளது. மேலும் மதுபான கடை திறக்க பணிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதி யைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான க்கடையை இப்பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இப்பகுதியில் மதுபான கடை திறந்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாது காப்பற்ற நிலை ஏற்படும் எனவும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×